இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி ரூபாயை மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி போலீஸ் கைது செய்தது. இதையடுத்து இந்த மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினின் பெயரை அமலாக்க துறை சேர்த்தது. அதைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய நடிகை ஜாக்குலினின் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் .இந்த மனுவை விசாரித்த நீதமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி .50 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்டு நடிகை ஜாக்குலினுக்கு நேற்று வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இன்று இந்த ஜாமின் வழக்கு விசாரணைக்கு வந்த போது நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More