Mnadu News

ரூ.25 கோடி லாட்டரி வென்றும் தலைமறைவாக சுற்றும் ஆட்டோ டிரைவர்..!

கேரளாவில் ரூ.25 கோடி லாட்டரி வென்றதால் நிம்மதி இழந்ததாக கதறும் ஆட்டோ டிரைவர். கேரளாவில் ரூ.25 கோடி லாட்டரி வென்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான அனூப் தற்போது, “நான் மன அமைதியை இழந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இது குறித்து அனூப் கூறுகையில், நிதி உதவி கோரி மற்றும் தங்களின் பல்வேறு தேவைகளை தீர்த்து வைக்குமாறு மக்கள் கும்பல் தன்னை தொந்தரவு செய்து வருவதால் தான் நிம்மதி இழந்து விட்டதாக அவர் கூறுகிறார். மேலும், வெற்றி பெற்ற பணம் கூட இன்னும் கைக்கு வரவில்லை அனால் மக்கள் தன்னை இவ்வாறு தொந்தரவு செய்வதால் நான் வீடு மாறிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்றும் புலம்பியுள்ளார்.

Share this post with your friends