Mnadu News

ரூ.39 ஆயிரத்தைத் தொட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம்.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் கிராம் ஒன்றுக்கு.55 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 875 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 39ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து 67 ரூபாய் 50 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 500 ரூபாய் உயர்ந்து 67 ஆயிரத்து 500-ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Share this post with your friends