Mnadu News

ரூ.560 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். மேலும், ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நிகழ்ச்சி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான விழா ஆகும். அவ்வையாருக்கு நெல்லிக்கனி தந்து அதியமான் ஆட்சி செய்த பூமி தர்மபுரி. தமிழ் வளர வேண்டும் என்பதால் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான்.

தர்மபுரி என்றதும் நினைவுக்கு வருவது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தான். தர்மபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன். பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தவர் கருணாநிதி.

திராவிட மாடல் அரசு வகுத்த திட்டங்கள் குறித்து நாள் முழுவதும் பேசலாம். சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 500 ரூபாய் ஏற்றிவிட்டு தேர்தல் வருவதால் 100 ரூபாய் குறைத்துள்ளனர். தேர்தல் காரணமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என நாடகமாடுகிறார்கள். மத்திய அரசுக்கு வருவாய் என்பது மாநில அரசு கொடுப்பது தான். தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்கள் மீது பிரதமருக்கு பாசம் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this post with your friends