Mnadu News

லாரி மீது கார் மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, லாரி மீது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்யா என்ற பெண், விஜயவாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More