தீவன வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு;, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள 74 வயதான ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல் அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் சிறுநீரக பிரச்னை காரணமாக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று இந்தியா திரும்பினார். பல உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள அவரது மகள் ரோஷ்னி ஆச்சார்யா தனது தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானம் அளித்து, புதிய வாழ்வளிக்க முன்வந்துள்ளதாக, அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More