வங்கதேசத்தின் டாக்கா நகரின், உத்தரா பகுதியை சேர்ந்தவர் அந்த மாணவி. இவர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதோடு, தமது அன்றாட தேவைகளுக்காக அருகில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர பணிக்கும் சென்று வந்துள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/09/FB-CHAT.jpg)
இந்த நிலையில் முகநூல் வழியே 25 வயதான ஹீரா சக்மா என்கிற நபர் அறிமுகமாகி உள்ளார். இந்த நபர் அந்த மானவியிடம் சாட்டிங் செய்து நட்பாக பழகி, அந்தப் பெண்ணின் அபிமானத்தை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் நல்ல நண்பர்களாகி விட்ட நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்து சீனாவில் செட்டில் ஆகிவிடலாம் என ஆசை வார்த்தைகளை அள்ளி இறைத்துள்ளார். இதை முழுதும் நம்பிய இளம் பெண் அந்த நபர் வரச் சொன்ன உத்தரா நகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு பெரும் ஆவலோடு வந்துள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/09/SEX-ASSUALT.jpg)
ஆனால், அங்கு சென்ற பின்னர் தான் பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த வீடு ஹீராவின் நண்பர் 58 வயதாகும் ஜீ ஷெங் என்பவரின் வீடு என தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் தான் ஜீ ஷெங் அவனின் சுய ரூபத்தை காட்டத் துவங்கி உள்ளான்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/09/SEX-ASSUALT-3.jpg)
ஆம், இரண்டு நாட்களாக வைத்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அதன் பின்னர் இவர்கள் ஒரு விடுதிக்கு அந்த மாணவியை அழைத்து சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அந்த மாணவி நடந்தவற்றை கூறி உதவி கேட்கவே, பதறிய அவர் மாணவிக்கு உதவ முன் வந்துள்ளார்.
உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, ஹீரா மற்றும் அவனின் நண்பர் ஜீ ஷெங் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மாணவியை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/09/arrest-new.jpg)