Mnadu News

வரவேறப்பை பெரும் சந்தரமுகி 2 செகண்ட் சிங்கிள்!

பி.வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், பிரபு, மனோபாலா போன்ற பலர் நடிப்பில் வெளியாகி ஒரு வருடத்தையும் தாண்டி ஓடிய படம் “சந்தரமுகி”. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் துவண்டு இருந்த ரஜினியின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கிய படமாக இன்று வரை இருந்து வருகிறது. ஆம், பாபா பட தோல்விக்கு பிறகு அனைவரும் ரஜினியை மட்டம் தட்டிய நேரத்தில் இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. சந்தரமுகி வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று ரஜினி, இன்னொன்று வித்யாசாகர், மூன்றாவது விளம்பரம் இவை அனைத்தும் சேர்ந்து மாபெரும் மகுடத்தை சூட்டியது.

சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்தரமுகி பட கூட்டணியில் சில மாற்றங்களை செய்து மீண்டும் அதன் பார்ட் 2 வை முடித்துள்ளார் இயக்குனர் பி.வாசு. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் சந்தரமுகி 2 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

“சந்திரமுகி 2” படத்தின் முக்கிய ரோலான “வேட்டையன் ராஜா’ , கங்கனா ரனாவத்தின் முதல் பார்வை வெளியாகி கவனம் ஈர்த்தது. அதே போல படத்தின் மைய பாடலை முதல் பாடலாக படக்குழு வெளியிட்டது. அது மாபெரும் ஹிட் அடித்த நிலையில், இன்று படத்தின் இரண்டாவது பாடலான “Moruniye” என்கிற பாடலை வெளியிட்டு உள்ளது. கீரவாணி இசையில், சரண், ஹரிகா நாராயன் குரல்களில், விவேக் வரிகளில், பாபா பாஸ்கர் நடனத்தில் இப்பாடல் வெளியாகி உள்ளது. பல நாட்களுக்கு பிறகு ஒரு தத்துவ பாடலை கேட்கும் பீல் ஐ இந்த பாடல் கேட்கும் நமக்கு தருகிறது.

விரைவில் சந்தரமுகி 2 ஆடியோ, டிரெய்லர் வெளியீடு நிகழ உள்ளது குறிப்பிடதக்கது. “சந்தரமுகி 2” செப்டம்பர் 15 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

Share this post with your friends