வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம், வணிக நிறுவனங்கள் செய்வதற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அதாவது, வருமான வரி சட்டம் பிரிவு 139 இன் துணைப் பிரிவு(1) இன் கீழ் 2022-23 ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்த கால கெடுவை வரும் நவம்பர மாதம்; 7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
,உள்நாட்டு நிறுவனங்கள் 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை வரும்; 31 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். பரிமாற்ற விலை விதிமுறைகளுக்கு உள்பட்ட நிறுவனங்கள் நவம்பர் மாதம் 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கையை இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More