Mnadu News

வாகன சோதனையில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர்; கார் மோதி உயிரிழப்பு..!

தென்காசி;

தென்காசி மாவட்டம் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடி அருகேயுள்ள வம்சவவிருத்தி நகர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரய்யா ,மற்றும் காவலர் மருதுபாண்டி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து தென்காசி நோக்கி அதிவேகமாக சென்ற இன்னோவா கார் சுந்தரய்யா மற்றும் மருதுபாண்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இன்னோவா கார் ஓட்டிவந்தவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை வருகின்றனர்.

Share this post with your friends