நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதோடு, 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் அக் கட்சியின் தiலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்;, காணொலியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வரும் 12-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஆலோசனையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More