திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய வர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக் இருந்த பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முதலில் விசாரணை மேற்கொண்டார்.அதையடுத்து பல்வீர் சிங் மார்ச் 29-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இச் சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அரசால் நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More