நாகப்பட்டினம் கோட்டை வாசல்படி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கீழ்வேளூர் தாலுக்கா காக்கழனி நுகத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த 28 வயதான ஆறுமுகம் என்பவர் தனியார் தொண்டு நிறுவனத்தின் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவர் விடுதியில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு இரவு நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More