Mnadu News

விபத்தில் இரு கைகளை இழந்த வாலிபர்; தமிழக அரசிடம் கோரிக்கை

மதுரை;

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் 24 வயது ராம்குமார். பி.காம் , சி.ஏ பட்டதாரியான இவர் கடந்த மூன்று வருடத்திற்கு பணியில் இருந்த போது , இரு கைகளையும் மின்சாரம் தாக்கியுள்ளது. சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் , கடும் சிரமத்திற்கு ஆளாகிய ராம்குமார் தற்போது இரு கைகளையும் இழந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கால்களால் மடிக்கணினி மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை இயக்கியும், அனைத்து வேலைகளையும் தனது கால்களால் செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசு தன்னுடைய நிலைமையை அறிந்து, தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இ – சேவை மையத்திற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் ராம்குமார் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this post with your friends