அண்ணாசாலை, டி.எம்.எஸ். மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாரதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது
அப்போது, அவ்வழியே தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி, இறங்கி சென்று, காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலனை முதல் அமைச்சர் அலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அருள்ராஜூக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More