Mnadu News

விலகியவர்களை மீண்டும் அழைத்து வர வேண்டும்: கே.எஸ்.ஈஸ்வரப்பா பேட்டி.

பெங்களூரில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ள கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா,பாஜகவை விட்டு பலத் தலைவர்கள் விலகி செல்வதால் பா.ஜ.க தலைமை மீது எனக்கு கோபம் இல்லை. அதே சமயம், பாஜகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அதே நேரம், கோபமடைந்து காங்கிரசில் இணைந்தவர்களை மீண்டும் பாஜகவுக்கு கொண்டு வர வேண்டும்.இந்த சூழலிலும்,பாஜக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends