கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநிலப்படியலுக்குள் கொண்டுவரப்படும் மேலும் அதனால் மத்திய அரசின் திட்டங்கள் மறுக்கப்பட்டால் அது பாதிக்காத வகையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தார்..
மேலும் விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும், தொழிற்சாலைக்கும் நிரந்தரத் தடைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும்.
கைத்தெறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும். மதுபான ஆலைகளுக்கு இதன்பின் அனுமதி இல்லை. மேலும் இருக்கும் மதுபான ஆலைகள் படிப்படியாக குறைக்கப்படும். என தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் டிடிவி தினகரன் பேசினார்