Mnadu News

விஸ்வரூபம் எடுக்கும் இரட்டை குழந்தைகள் விவகாரம்! சிக்கலில் நயன்- விக்கி தம்பதி!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் அனைவரும் வியக்கும் அளவுக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாபெரும் திருமண நிகழ்வுக்கு பல தரப்பட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை புரிந்தனர். அது பேசு பொருளாகவும் மாறியது. நெட்பிளிக்ஸ் இல் இவர்களின் திருமண ஆவணப்படம் பல கோடிகளுக்கு இவர்கள் விற்றதும் அனைவரையும் ஆச்சரிய பட வைத்தது.

இவர்களுக்கு திருமணம் ஆகி வெறும் மூன்று மாதங்களே ஆகி உள்ள நிலையில் எப்படி இவர்கள் அதற்குள் இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்துள்ளனர் என பல தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயம் அரசின் கவனத்துக்கு சென்றுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்று விளக்கம் கேட்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறி உள்ளார்.

Share this post with your friends