Mnadu News

வீரரின் சவப்பெட்டியை தோளில் சுமந்த சத்தீஷ்கார் முதல் அமைச்சர்.

சத்தீஷ்காரில் தன்டேவாடா நகரில் தேடுதல் வேட்டைக்கு சென்றபோது, பதுங்கி இருந்து நக்சலைட்டுகள் நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில், மாவட்ட ரிசர்வ் பாதுகாவல் படையை சேர்ந்த 10 வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், இந்த சம்பவத்தில், உயிரிழந்த வீரரின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் பூபேஷ் பாகல் நேரில் கலந்து கொணடு,வீரரின் உயிரிழந்த உடல் இருந்த சவப்பெட்டியை தன்னுடைய தோளில் தூக்கி சென்றார்.

Share this post with your friends