Mnadu News

வேங்கைவயல் விவகாரத்தில் புதிய திருப்பம்: குடிநீர் மாதிரிகளில் வேறுபாடு இருப்பதாக தகவல்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் மாதிரி கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், வேங்கைவயல் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரியும், மக்களுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்த மாதிரியும் மாறாக உள்ளதாகவும், மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நாளில் எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரியும் மாறாக உள்ளதாக சென்னை தடவியல் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends