Mnadu News

வேலூரில் இரண்டு கார்களில் இருந்து ₹.1,60,000 பறிமுதல்.

தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் உரிய ஆவணமின்றி பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கிரீன் சர்கல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தனி வட்டாச்சியர் ரூபி பாய் தலைமையில் வாகன தணியிக்கையின் போது ஜான் பிரிட்டோ என்பவரிடம் இருந்து 1. லட்சம் மற்றும் கோவிந்தன் என்பவரின் காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 60,000 என மொத்தம் 1,60,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Share this post with your friends