Mnadu News

ஸ்டாலினுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா பானர்ஜி

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் முழு பலத்துடன் விளங்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரான மூன்றாமணி அமைக்க முயன்று நாட்டின் நலன் கருதி அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தினார்.

ஆனால் மறைமுகமாக மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை மம்தா பானர்ஜி செய்து வருகிறார். அந்த வகையில் மேற்கு வங்கம் நீங்கலாக மற்ற மாநிலங்களில் மாநிலக் கட்சிக்கு தங்களது ஆதரவை தருவதாக கூறியிருந்தார்.

அதை நடைமுறைப் படுத்தும் வகையில் இந்தியாவின் தென்கோடியான தமிழகத்தில் அசைக்க முடியாத மாநிலக் கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 40 தொகுதிகளுக்கு தங்களது முழு ஆதரவை தருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமை தெரிவித்திருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends