ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/09/image-91-1024x374.png)
தூத்துக்குடி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது கடம்பாகுளம் பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தற்போது இரண்டு போகம் தாங்கள் நல்லபடியாக விவசாயம் செய்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் ஒருபோகம் விவசாயம் கூட செய்ய முடியாமல் போய்விடும். குடிநீரை உறிஞ்சி விவசாயத்தை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்னனர்.