கடந்த சில தினங்களாக ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/p07gfcws-1024x1024.jpg)
நிலச்சரிவின் காரணமாய் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை பலத்த சேதத்தை சந்தித்து உள்ளன. ஸ்பெயினில் உள்ள டோரெவிஜா நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வாகன ஓட்டிகள் பலர் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/d10d5575ca37f4cb5a24531a04ef6fcd.jpg)
இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கு ஸ்பெயினில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவிக்கை வெளியிட்டு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு துரிதப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.