Mnadu News

ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சை பேச்சு அடுத்த வரிசையில் நடிகர் அஜித்

ஆரம்ப காலத்தில் சின்னதிரையில் வேலைபார்த்து வந்தவர் தான் ஸ்ரீ ரெட்டி . ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் .ஸ்ரீ ரெட்டி காதலரின் பேச்சை கேட்டு சினிமாதுறையில் சேர விருப்பட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டுவந்தார். ஆனால் சினிமாவில் யாரும் எந்த வாய்ப்பும் தராத நிலையில் மனமுடைந்த ஸ்ரீ ரெட்டி சினிமாதுறையில் கால் பதித்து ஆகவேண்டும் என்ற அவரது ஆசை அவரை குறுக்கு வழியில் தள்ளியது .தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக சொல்லி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இன்னும் சொல்ல முடியாத பலர் அவரை படுக்கையறைக்கு அழைத்தனர் .ஆரம்பத்தில் இதை மறுத்த ஸ்ரீ ரெட்டி வேறு வலி இல்லாமல் அந்த தவறை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செய்தார் .

 

அப்படி இருந்தும் அனைவரும் கை விட்ட நிலையில் பல போராட்டத்துக்கு பிறகு ஊடகங்களில் அவரது பதிவை மிகவும் வேதனையுடன் பதிவு செய்தார். தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்ற சர்சைக்குரிய செய்தியை வெளியிட்டார் . சமீபத்தில் முகநூல் ஒன்றில் நடிகர் அஜித்தை பற்றியும் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அஜித் அவர்களை எனக்கும் பிடிக்கும் என்றும் அவர் எந்த சர்ச்சையில் சிக்காதவர் என்றும் அவரது நடிப்பும் மட்டும் இல்லாமல் நிஜவாழ்க்கையில் அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் வெளியிட்டார் . தற்போது பட வாய்ப்புகள் நிறைய வரும் நிலையில் அஜித்தை பற்றிய இந்த பதிவு ஒரு விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Share this post with your friends