Mnadu News

ஹனிமூன் செல்வதற்காக புது மாப்பிள்ளை செய்த வினோத செயல்! கம்பி என்னும் பரிதாப நிலை! 

உத்தரபிரதேசம் மாநிலம் மோரதபாத்தை சேர்ந்தவர் ஹாசிம். இவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு முன்பு தனது மனைவியிடம் ஹனிமூனுக்காக குளு மணாலி அழைத்து செல்வதாக ஹாசிம் உறுதி அளித்துள்ளார்.

ஆனால் அதற்காக அவரால் போதிய அளவில் பணம் சேர்க்க முடியவில்லை. இதற்கிடையே ஹனிமூன் செல்வது குறித்து அவரது மனைவி தொடர்ந்து துணப்பி வந்ததாக கூறப்படுகிறது.

வேறு வழி இல்லாமல் குறுக்கு வழியில் சென்றால் தான் பணம் கிடைக்கும் என எண்ணிய அவர், ஹனிமூன் செல்வதற்காக திருட்டில் ஈடுபட முடிவு செய்தார். தானா மஜ்ஹோலா என்ற பகுதியில் மருத்துவ ஏஜென்சிக்கு பணத்துடன் சென்ற மருத்துவ விற்பனை பிரதிநிதியை மாஸ்க் அணிந்தவாறு ஹாசிம் பின் தொடர்ந்துள்ளார்.

அதன் பிறகு அவரை திசை திருப்பி பணத்தை லாவகமாக எடுத்து கொண்டு தப்பி ஓடு உள்ளார். இந்த நிலையில் அந்தப் பையில் ₹2 லட்சம் ரூபாய் இருந்ததாகவும், அதை திருடியது ஹாசிம் தான் எனவும் சி சி டி வி கட்சிகளின் அடிப்படையில் போலீஸார் உறுதி செய்தனர். 

ஹாஸிமை கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், ஹனிமூன் செல்ல பணம் இல்லாததால் தான் நான் திருட்டில் ஈடுபட்டேன் என கூறி அனைவரையும் அதிர வைத்து உள்ளார். அவரிடம் இருந்து ₹50 ஆயிரம் ரொக்கம், புல்லட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். 

Share this post with your friends