கர்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த பிபரவரி மாதம். 5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்கள் மீதான வாதப் பிரதிவாதங்கள் 10 நாள்கள் நடைபெற்ற நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்{ தூலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வெளியிட்டனர். அதில்,
நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாப்புக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தடை செல்லும் என்றும், நீதிபதி சுதான்{ தூலியா தடை செல்லாது என்றும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளனர்.
நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளதால், இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹேமந்த் குப்தா நாளையுடன் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More