Mnadu News

ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உயிரிழப்பு.

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் அருகே காலை 10 மணியளவில் பறந்து கொண்டிருந்த சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தகவலறிந்த ராணுவத்தினர் இரண்டு விமானிகளை மீட்டு அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சேர்த்தனர். பலத்த காயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share this post with your friends