Mnadu News

ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியாவில் வரும்; 16 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13 தேதி வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி; நடைபெறுகிறது.
மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன.
நவம்பர மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன.
இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு அதாவது சூப்பர் 12 க்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

Share this post with your friends