திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பாலகட்டுமானப் பணிகளை திருநாவுக்கரசர் எம்.பி. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பால திட்டப்பணிகள் எனது தேர்தல் வாக்குறுதியில் பிரதான வாக்குறுதியாக இடம் பெற்றது. இதனை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளித்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 8, 9 ஆண்டுகளாக தொடர்ந்து முடிக்கப்படாமல் இருந்த இந்த பால பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.
மெஜாரிட்டி எம்எல்ஏக்களின் அடிப்படையில் சீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதில் சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என எனக்கு தெரியாது. அப்படி அவர்களின் கட்சி அங்கீகாரம் சின்னம் தொடர்பாக அனைத்து முடிவு எடுக்க வேண்டியது தேர்தல் கமிஷனும் கோர்ட் மட்டும் தான். சட்டமன்றத்தில் இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து உட்கார வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.