கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 12 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பீட்டில், திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட பகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார் .