Mnadu News

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ரக்சா பந்தன் வாழ்த்து

நாடு முழுவதும் ரக்சா பந்தன் தினம் இன்று கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது. ரக்சா பந்தனை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். சகோதர சகோதரிகளிடையே அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை உணர்வை அடிப்படையாக கொண்ட இந்த பண்டிகை, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசம் மற்றும் மதிப்புணர்வை ஏற்படுத்துகிறது என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Share this post with your friends