Mnadu News

கூட்டணிக் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு நாளைக்குள் இறுதி

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகளை நேற்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மார்ச் 19 முதல் வேட்புமனுத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பெயர்களை நாளைக்குள் திமுக தலைமை வெளியிடும் என முக ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கிடைக்கும் சின்னத்தில் போட்டியிடுமா இல்லை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்விக்கும் இந்த இரண்டு நாட்களுக்குள் பதில்  கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends