Mnadu News

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்தனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் இன்று தொடங்கிய நிலையில் சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார்.

இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு, நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல. வினா விடை முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா என எடப்பாடி பழனிசாமியை பார்த்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, இன்றும் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends