வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்காக சிறப்பு நிதி 2000 ரூபாயை வழங்குவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்கள் அதாவது விவசாயிகள், ஏழைத் தொழிலாளிகள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு வழங்குகின்ற ஒருமுறை சிறப்பு நிதி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார்.
ஏழை தொழிலாளிகளுக்கான சிறப்பு நிதியாக ருபாய் 2000 திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.