Mnadu News

சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 19-ம் தேதி நிமோனியா என்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Share this post with your friends