மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத்தாக்கலை தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்டு வருகிறது. மேலும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுத்தாக்கலை செய்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.