Mnadu News

சோயப் அக்தருடன் செல்பி எடுத்து பகிர்ந்த சசி தரூர்: இரண்டு அக்தரா..? என கலாய்த்த நெட்டிசன்கள்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் துபாயில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்படும்போது, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருடன் ஒன்றாக செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். வர்களில் ஒருவர் சகோதரா, நான் 2 சோயப் அக்தர் என நினைத்து விட்டேன் என்றும் என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு இரட்டை பார்வை வந்து விட்டதோ என சோதனை செய்து கொண்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

Share this post with your friends