Mnadu News

டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று வரவேற்றனர்.இந்நிலையில் இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது ; ஜனாதிபதி மாளிகையிக்கு வருகை புரிந்த அதிபர் முய்சு, ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்றும் பிரதமர் மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த சந்திப்பின் மூலம் இந்தியா மற்றும் மாலத்தீவிற்கு இடையே இருதரப்பு உறவு, பரஸ்பர பலன், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More