Mnadu News

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவரை சக மீனவர்கள் மீட்டு நாகை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீனவர்களை கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். மீனவர்கள் படகுகளை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends