Mnadu News

தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் தொடங்கியது.

முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் தொடங்கிய மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அதன் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ”தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. துறையை தேர்ந்தெடுப்பதுபோல அரசியலையும் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என பேசினார்.

இன்று மாலை 6 மணி வரை இவ்விழா நடைபெற உள்ள நிலையில், உதவி ஆணையர் தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Share this post with your friends