திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்த சண்முகம், மத்திய பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ,சண்முகத்திற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவர்களின் மகன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அவரது இல்லத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய ஒரே மகனும் தற்கொலை செய்து கொண்ட மனஉளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி பெரும் சோகத்தில் மூழ்கினர் .மகளையும் ஓசூர் பகுதியில் திருமணம் முடித்து கொடுத்துள்ளதால் தனிமைக்கு ஆளான மகாலட்சுமிக்கு மேலும் மன உளைச்சல் அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் நடைபெறும் தினத்தன்று மகன் தற்கொலை செய்த அறைக்கு சென்று மகாலட்சுமி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கே.கே.நகர் போலீசில் அவரது மகள் வித்யா புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.