Mnadu News

நாடாளுமன்ற வரலாற்றில் 17-வது மக்களவை பொற்காலம் என கருதப்படும்: பிரதமர் மோடி

நாடாளுமன்ற வரலாற்றில் ஓம்பிர்லா தலைமையின் கீழ் 17-வது மக்களவையில் எடுக்கப்பட்ட முடிவானது ஒரு பொற்காலம் என கருதப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அவையில் பேசிய பிரதமர் மோடி, மதிப்புக்குரிய சபாநாயகர் 2-வது முறையாக இந்த பதவியை ஏற்றிருப்பது அவைக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று புகழாரம் சூட்டினார்.

நாடாளுமன்ற வரலாற்றில் ஓம்பிர்லா தலைமையின் கீழ் 17-வது மக்களவையில் எடுக்கப்பட்ட முடிவானது ஒரு பொற்காலம் என கருதப்படும் என பேசியுள்ளார். இந்தியாவின் வருங்காலத்திற்கு வழிகாட்டுவதில் 17-வது மக்களவை ஒரு முக்கிய பங்காற்றியது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends