Mnadu News

நாடு முழுவதும் ஒலிக்கும் நீட் தேர்வு எதிர்ப்புக் குரல் – முதலமைச்சர் ஸ்டாலின்

நீட் தேர்வு எதிர்ப்புக் குரல் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்தின் போது நீட் முறைகேடு, நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Share this post with your friends