Mnadu News

புதிய ரெகார்ட் படைக்கப்போகும் ஜெயிலர்! வசூல் மழை!

பீஸ்ட் திரைப்பட தோல்விக்கு பிறகு நெல்சன் என்ன செய்து விட போகிறார் என்று பலரும் வினவி வந்த நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை நீங்கள் தான் இயக்குனர் என ரஜினி மற்றும் சன் பிக்சர்ஸ் கொடுத்த அந்த உத்வேகம் தான் இன்று ஜெயிலர் படத்தை உலக அளவில் மக்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

நெல்சன் போட்ட கடின உழைப்பு, அதாவது ஒரு வருடமாக படத்தை செதுக்கி ஜெயிலர் குழு கொடுத்த அர்பணிபுக்கு மக்கள் தந்த பரிசு தான் பிளாக் பஸ்டர் வெற்றி. மோகன்லால், விநாயகன், ஜாக்கி ஷராப், ஷிவாராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின், சுனில் என பல மொழி நடிகர்களை பாந்தமாக அந்தந்த ரோல்களில் பொருத்தி சரியான கம் பேக் கொடுத்துள்ளனர் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன்.

ஆம், 480 கோடிகளை அள்ளி உள்ள ஜெயிலர் 500 கோடிகளை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினி ரசிகர்களை வேற லெவல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More