Mnadu News

பேரவை நடவடிக்கையை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி – அமைச்சர் ரகுபதி

தங்கள் தோல்வியை மறைப்பதற்காக பேரவை நடவடிக்கையை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையின் 3ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இன்றும் அ.தி.மு.க.வினர் விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி “இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து சட்டசபையை முடக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய். மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்ததால் . அ.தி.மு.க.வினர் சட்டசபையில் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் தி.மு.க. அரசு வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவைப்படவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

Share this post with your friends