மகா சிவராத்ரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியையொட்டி இன்று நாள் முழுவதும் விரதமிருந்து , சிவபுராணம் படிப்பதுதான் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர் . மகா சிவராத்ரியையொட்டி மயிலை கபாலீஷ்வர், காஞ்சீ ஏகாம்பரேஸ்வர் , திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.