மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் சில உணவகங்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்வது, கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வது, கலப்படம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள், பலகாரக் கடைகளிலும் கலப்படம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், ஜூலை மாதத்தில் 656 உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, விதிகளின்படி இயங்காத அல்லது புகாருக்குள்ளான 68 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், உணவகம் அல்லாத 752 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, புகாருக்குள்ளான 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஜூன் மாதம் முதல் உணவகம் அல்லாத 1565 கடைகளில், சோதனை மேற்கொள்ளப்பட்டு 85 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை என கடந்த மாதங்களில் மட்டும் மொத்தம் 2879 கடைகள் மற்றும் உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 116 உணவகங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை மாவட்டத்தில்உணவுகளில் கலப்படம், தரமற்ற உணவு விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு
துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.