முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு தலா இரண்டு முறை விளையாட வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதியில் புள்ளிப்பட்டியலில் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும்.
கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கும் முத்தரப்பு தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அடுத்ததாக சொந்த மண்ணில் நடந்த ஏழு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-4 என்ற கணக்கில் இழந்தது. அதே போல, வங்காளதேசம் அணி ஆசிய கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த தொடர் மூன்று அணிகளுக்கும் முக்கியமாக வாய்ந்ததாக கருதப்படுகிறது.