change makers என்ற தலைப்பில் மகளிர் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்தத்துறையாடிய போது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்தார் .
மோடியை கட்டி பிடித்தது ஏன் என்று மாணவி கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார் .மோடி தனக்கு அரசியல் கற்று கொடுத்ததால் அன்பின் அடிப்படையில் அவரை கட்டியணைத்ததாக கூறினார் .
இந்திய அரசு கல்விக்காக செலவிடும் தொகை மிக குறைவு என்றும் மேலும் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு கூடுதல் நீதி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .பாலின சமத்துமுறையில் வட இந்தியாவை ஒப்பிடுகையில் தென்னிந்தியா சிறந்து விளங்குகிறது .
வலிமையான அரசியல் அமைப்புகளின் மீது தான் மோடி கவனம் செலுத்திவருகிறார். மகளிருக்கான 33 % ஒதுக்கீடு நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மேலும் ஆண்களை விட பெண்கள் எந்த வகையில் சளைத்தவர்கள் இல்லை .
மேலும் நாட்டை விட்டு நீரவ் மோடி ,விஜய் மலையா ஆகியோர் வெளியேறியதற்கு மோடி தான் காரணம் என கிண்டலாக பேசினார். ஜிஎஸ்டி அமைப்பு மிகவும் சிக்கலாக இருப்பதால் நிச்சயம் காங்கிரஸ் கட்சி மாற்றி அமைக்கும் என்று கூறினார். சீனா 25000 வேலைவாய்ப்புகளை 24 மணி நேரத்தில் உருவாக்கி வைக்கிறது ஆனால் இந்திய வெறும் 450 வேலைவாய்ப்புகளை மட்டும் உருவாக்குகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.